பாசிப்பயறையும் அரிசியையும் ஒன்றாக 8 முதல் 9 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பருப்புடன் சேர்த்து அரைக்கவும். மாவை அரைத்தவுடன் கடைசியில் உப்பு சேர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். (மேலே வைக்க) தோசைக் கல்லில் மாவை பரப்பி எண்ணெய் விட்டு மேலே சிறிது வெங்காயக் கலவையைத் தூவி முறுகலாக சுட்டு எடுக்கவும்.