நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆரோக்கியமாகவே வாழ கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் நாம், இன்றைய சூழலில் ஆரோக்கியம் என்பதை விட்டு விட்டு கண்களுக்கு அழகானதையே சமைத்து உண்கிறோம். உங்கள் ஆரோக்கியத்தை பேணி காக்க இதோ, சுவையான சத்தான தானிய காய்கறி சாம்பார்.
* ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
* வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்ர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
* காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
* அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.
* கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* (குறிப்பு: இந்த சாம்பாரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. தானிய வகைகளை தோலுடன் சேர்ப்பதால் நார்ச்சத்தும் கிடைத்து விடும். எண்ணெய் அதிகம் சேர்க்காத அருமையான சாம்பார் இது.)