வறுத்துப் பொடிக்க:
தாளிக்க:
பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, பொடித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த சென்னாவை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி, அரைத்த சென்னாவுடன் சேர்க்கவும். மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயை காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சென்னா கரைசலை அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் பொடித்த பொடியை தூவி இறக்கவும். இதை வடிகட்டி "சூப்"பாகவும் குடிக்கலாம். சாதாரணமாக பருப்பு போட்டு ரசம் செய்வோம். இதில் சென்னா சேர்த்திருப்பதால் புரதச்சத்து நிறைந்து இருக்கிறது.