தேங்காயைத் துருவி பாலை எடுத்துவிட்டு, பூவை உலர வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால், நெய், சக்கரைப் பவுடர், ஏலப்பொடி, திராட்சை, முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் எல்லாம் போட்டு கிளறிவிட்டுக் காய்ச்ச வேண்டும். இட்லி மாவுப் பதம் வந்ததும் அம்மோனியம் பைகார்பனேட்டையும் போட்டுக் கிளற வேண்டும். பின் தகர ட்ரேயில் டால்டாவைத் தடவி, அதில் ஊற்றி விட வேண்டும். ஆறிய பின் தேங்காய்ப்பால் கேக் தயார்.