அரிசி, உளுந்தை சுத்தம் செய்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து, வெந்தயம் சேர்த்துக் கரகரப்பாக கிரைண்டரில் அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து 4 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உடைத்த முந்திரி, பாதாம் சேர்த்து, தாளித்து மாவில் கலக்கவும். மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் வேக வைக்கவும். பாதி வெந்ததும், இட்லி மீது ஒவ்வொரு பேரீச்சம்பழத்தைப் பதிக்கவும். இட்லி வெந்ததும் இறக்கவும். தேங்காய் சட்னி, சாம்பார், புதினா சட்னி தொட்டுக்கொள்ளலாம். இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான ஆகாரம்.