முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையம் சிறிது வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு அவற்றின் தோலை எடுத்துவிட்டு பேரிச்சம்பழத்தை கொட்டை எடுத்தது அதனுடன் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து பாலுடன் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். பின்பு அதன்மேல் வெல்லத்தைப் போட்டுக் கலக்கவும். நன்கு கொதித்ததும் நெய்யில் திராட்சையைப் பொரித்துப் போடவும். சிறிது உப்பு சேர்க்கவும். பச்சைக் கற்பூரத்தையும், கிராம்பு, ஏலக்காய், சிறிது சீனி சேர்த்துப் பொடித்துப் போடவும்.