நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும். பாலும் தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். இதை குளிர வைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி, திராட்சை தூவி ஸ்பூன் போட்டு பறிமாற வேண்டும்.