சுரைக்காயையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள், பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். 5 நிமிடம் வதக்கிய பின், சுரைக்காயையும் சேர்த்து தீயைக் குறைத்து மூடி வையுங்கள். அவ்வப்பொழுது திறந்து கிளறுங்கள். சுரைக்காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து, நன்கு கொதித்து சற்று சேர்ந்தாற்போல் வரும்பொழுது இறக்குங்கள்.