பைனாப்பிள் தோலை முள் வரை நன்றாக நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுங்கள். நேந்திரம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அதை சிறுசிறு துண்டுகளாக்கவும். இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். தண்ணீர் அதிகமாக இருந்தால் வற்றவைக்கவும். 3 விசில் வரும் வரை வந்ததும், துண்டுகளை எடுத்து ஆறவைக்கவும். இப்போது தயிர், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் போட்டு அடிக்கவும். அதை பைனாப்பிள் துண்டுகளுடன் கலக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், துண்டு பண்ணிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பில் பைனாப்பிள் துண்டுகளை சேர்க்கவும். இப்போது சூடான சுவையான பைனாப்பிள் குழம்பு தயார்.