வடைன்னா உளுந்த வடை, பருப்பு வடை தான் ஞாபகத்துக்கு வரும்... இனிமே மரவள்ளிக் கிழங்கு வடையும் ஞாபகத்துக்கு வரும் பாருங்க... அட! ஆமாங்க.. செலவில்லாத அதேநேரத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய வடை இது... சுவையோ பிரமாதமாக இருக்கும்.
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.