கோதுமையில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். கடலைப்பருப்பைக் கழுவி அதில் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். இரண்டையும் குக்கரில் வேறு வேறு பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடங்கள் வெயிட் வைத்து வேக வைக்கவும். எல்லா காய்கறிகளையும் நீள வாக்கில் நறுக்கவும். கேரட், பீன்ஸ், பட்டாணி மூன்றையும் ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, முதலில் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும், கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிடவும். அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். வெந்த கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து, உப்பு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதித்த பிறகு வெந்த பருப்பு, கோதுமை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறவும். கொத்த மல்லி சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.